News

சீரற்ற காலநிலை காரணமாக களனி ஆற்றின் நீர் மட்டம் உயர்வு.

சீரற்ற காலநிலை காரணமாக களனி ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களில் சீதாவக, தொம்பே, ஹோமாகம, பயகம, கடுவெல, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு, நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker