News

தேங்காய் விலை நெருக்கடிக்கு தீர்வு தரும் நோக்கில், சதொச ஊடாக 130 ரூபாய்க்கு தேங்காய் விநியோகிக்க அரசாங்கம் தீர்மானம்

நாட்டில் நிலவும் தேங்காய் விலை நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 2 வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



இதன்படி சதொச ஊடாக தேங்காய் ஒன்று 130 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளதாக இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தார்.



அத்துடன், அரசாங்கத்திற்குச் சொந்தமான தோட்டங்களில் கிடைக்கும் தேங்காய் உற்பத்திகள் இவ்வாறு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button