News

வாகன இறக்குமதி அனுமதி கிடைக்கப் போவதை தெரிவித்து பொதுமக்களை ஏமாற்றி இலட்சக்கணக்கான ரூபாவை முன்பணமாகப் பெற்று நிதி மோசடி செய்த நிறுவனங்கள்.

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை மேற்கொள்ளாத நிலையில், வாகன இறக்குமதிக்கு அனுமதியளிப்பதாகக் கூறி பல நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே பேராசிரியர் அமிந்த மெட்சில பெரேரா இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் இது குறித்து இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதாக தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், வாகன இறக்குமதி தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை.

எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்ற கருத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி புதிய வாகனங்களுக்காக சில நிறுவனங்கள் இலட்சக்கணக்கான ரூபாவை முன்பணமாகப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button