News
ரிஸ்வி சாலிஹ் பதவி விலக வேண்டும் ; நளீன் பண்டார..

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள மருத்துவ கட்டளைச் சட்டத்தை மீறியுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நளீன் பண்டார குறிப்பிட்டார்.
இதனால் அவர் பிரதி சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் வலியுருத்தியுள்ளார்.முன்னாள் சபாநாயாகரை தாண்டி பிரதி சபாநாயகர் நாட்டின் சட்டத்தை மீறி செயற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நளீன் பண்டார குறிப்பிட்டார்.
போலி வைத்தியர் ஒருவர் பிரதி சபாநாயகர் பதவியில் இருக்கும் போது நாட்டில் உள்ள போலி வைத்தியர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போகும் என அவர் குறிப்பிட்டார்.

