News

தன்னிடம் கல்வி கற்கும் மாணவிக்கு அந்தரங்க – ஆபாச வீடியோ காட்சிகளை அனுப்பிய குற்றத்தில் ஆசிரியை ஒருவர் காவல்துறையினரால் கைது

பதவிஸ்ரீபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவி ஒருவருடன் வாட்ஸ்அப் ஊடாக ஆபாசமான காணொளிகளை பகிர்ந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாணவியின் தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், சனிக்கிழமை (ஜனவரி 06) அந்த ஆசிரியை பதவி ஸ்ரீபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எட்டாம் வகுப்பு படிக்கும் தனது மகளின் வாட்ஸ்அப்பில் ஆசிரியயை ஆபாச காட்சிகளை அனுப்பியதாக கூறி அந்த நபர் தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையத்தில் (NCPA) புகார் அளித்துள்ளார்.

NCPA மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பதவி ஸ்ரீபுரா காவல்துறையின் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பிரிவினரால் சந்தேகத்திற்குரிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 

பொலிஸாரின் விசாரணைகளின் போது, , இதற்கு முன் ஒரு சந்தர்ப்பத்திலும் பாடசாலை கணினி வகுப்பறையில் ஆசிரியை தனது வெளிப்படையான வீடியோக்களை காட்டியது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட பெண் கெபிதிகொல்லேவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பதவி ஸ்ரீபுர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button