News
நேற்று யாழில் கரையொதுங்கிய மர்ம வீட்டை சோதனை செய்த போது 18 புத்தர் சிலைகளை பொலிஸார் அதிலிருந்து மீட்டனர்

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று (15) கரையொதுங்கிய மர்ம வீட்டிலிருந்து 18 புத்தர் சிலைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக கடல் நிலை மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல் மற்றும் நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டு வருகிள்றது. இதன்போது மியன்மாரிலிருந்து இந்த நினைவாலயம் வந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.
குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரவு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் அதில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும், செப்பேடுகளையும் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் பொருட்களை தற்பொழுது மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பு.கஜிந்தன்

