News

மின்சாரக் கட்டணத்தை குறைக்கும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என அரசு அறிவிப்பு

மின்சாரக் கட்டணத்தை குறைக்கும் கொள்கையின் ஒரு படியாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.

அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நேற்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தில் 20% குறைப்பை மேற்கொள்ள பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது.

அதன்படி, அந்த பரிந்துரைகளை வலுசக்தி அமைச்சகத்திற்கு வழங்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button