News
சில பிரதேசங்களில் இணைந்தும், சில பிரதேசங்களில் தனித்தும் போட்டியிட்டு, ஆட்சியைக் கைப்பற்றும்போது ஒன்றிணையும் யோசனை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும்- ஐக்கிய மக்கள் சக்தியும் கவனம்
எதிர்வரும் உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான இரண்டு முக்கிய வழிமுறைகள் குறித்து உடன்பாட்டை எட்டுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் கவனம் செலுத்தியுள்ளன.
சில உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாகப் போட்டியிடுவதற்கும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்காகத் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றும்போது ஒன்றிணைவது எனவும் இதன்போது யோசனை முன்மொழியப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.