News
சுதந்திர தினத்தில் சமூக நீதிக் கட்சியின் 3 வருட பூர்த்தி மாநாடு!

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையில் ‘சமூக நீதியை நிலைநாட்டும் நோக்கில்’ ஆரம்பிக்கப்பட்ட சமூக நீதிக் கட்சியானது, இவ்வருடம் பிப்ரவரி மாதம் 4 ஆம் திகதி தனது 3 வருட பூர்த்தியை அடைகிறது. இதனை முன்னிட்டு கொழும்பில், கலாநிதி என். எம். பெரேரா நிலையத்தில் (106, Dr. N M Perera Mawatha (Cotta Road), Colombo 08) சமூக நீதிக் கட்சி, தனது 3 வருட பூர்த்தி மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.
பிப்ரவரி மாதம் 4 ஆம் திகதி மாலை 4.00 முதல் 6.30 வரையில் இடம்பெறும் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
உங்கள் வருகையை கட்சியின் தேசிய அமைப்பாளர் இர்ஃபான் பன்னாவை (0773110056) தொடர்புகொண்டு 02.02.2025 இற்கு முன்னர் உறுதி செய்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
– சமூக நீதிக் கட்சி.
31.01.2025.
#SocialJusticeParty

