News

இலங்கையில் பிறந்த  6 சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிடும் நிகழ்வு இன்று – பொதுமக்களிடம் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் பரிந்துரைக்கும் பெயர் என்ன?

அம்பலாந்தோட்டை –  ரிதியகம சஃபாரி பூங்காவில் புதிதாகப் பிறந்த ஆறு சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிடும் நிகழ்வு இன்று (12) நடைபெற்றது. மூன்று மாத வயதுடைய ஆறு சிங்கக் குட்டிகளுக்கு  பெயரிடுவதற்காக சஃபாரி பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. சஃபாரி பூங்கா முன்னர் பொதுமக்களிடம் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டது.



மேலும் பரிந்துரைக்கப்பட்ட சுமார் 4,000 பெயர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு பெயர்களின் பெயரிடல் நிகழ்வு  விலங்கியல் பூங்காத் துறையின் இயக்குநர் ஜெனரல்  ஆர்.சி. ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.



அதன்படி, ஆண் சிங்கக் குட்டிக்கு மேகா என்றும், ஐந்து பெண் சிங்கக் குட்டிகளுக்கு தாரா, அக்ரா, பூமி, அகிரா மற்றும் எல்சா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.



இந்த நிகழ்வில் ரிதியகம சஃபாரி பூங்கா பொறுப்பாளர்  ஹேமந்த சமரசேகர மற்றும் கால்நடை மருத்துவர் நதுன் களுஆராச்சி ஆகியோரும்  கலந்து கொண்டுள்ளனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button