News

கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் முதல் பெண் தலைவியாக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் தெரிவு


(எம்.என்.எம்.அப்ராஸ் )

கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் முதல் பெண் தலைவியாக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர், சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் தெரிவு செய்யப்பட்டார்.

கல்முனை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று (19) இடம்பெற்ற கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் இடம்பெற்ற 2025/26ம் ஆண்டுக்கான கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது பெண் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா ஷாறிக் காரியப்பர் தெரிவு செய்யப்பட்டார்.

இவர் கிழக்கு மாகாணத்திலேயே பிராந்திய சட்டத்தரணிகள் சங்கங்களில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் சட்டத்தரணியாக வரலாற்றில் இடம் பெறுகின்றார் என்பதுடன் மேற்படி தேர்தலில் அவரை எதிர்த்து சிரேஷ்ட சட்டத்தரணிகளான யூ.எம்.நிசார் மற்றும் ஐ.எல்.எம்.றமீஸ் ஆகியோர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா ஷாறிக் காரியப்பர் அவர்கள் கல்முனை மஹ்மூது மகளீர் கல்லூரி மற்றும் இலங்கை சட்டக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியுமாவர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button