News
கடுமையான உழைப்பின் மூலமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என தமிழரசு கட்சியினர் தெரிவிப்பு

ஹஸ்பர் ஏ.எச்_
இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திருகோணமலை மாவட்டத்துக்கான கட்டுப்பணம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களால் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (14)மாலை செலுத்தப்பட்டது.
இம்முறை தமிழ் அரசு கட்சியானது திருகோணமலை மாநகர சபை, மூதூர் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, வெருகல் பிரதேச சபை, கிண்ணியா பிரதேச, தம்பலகாமம் பிரதேச சபை ஆகிய சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கடுமையாக உழைப்பதன் மூலமாக போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் எனவும் தெரிவித்தார்

