News

இந்த அரசை ஆட்சியில் அமர்த்த மக்கள் எடுத்த தீர்மானத்திற்கு மதிப்பளித்தே நான் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன் ; காதர் மஸ்தான்

இந்த அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்துவதற்கு மக்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மதிப்பளித்தே தான் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக இலங்கை தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக காதர் மஸ்தான் நேற்று வாக்களித்தார்.



அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும்.  மக்கள் அவர்களை ஆட்சியில் அமர்த்தினார்கள்.  நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.  மக்களின் கருத்தைப் பின்பற்றி வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன். 

இனிவரும் காலங்களில் அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  மக்கள் கொடுத்த அதிகாரத்திற்கு எதிராக செயல்படுவதை விட, மக்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button