News

இலங்கைக்கு, இந்தியாவுடன் விருப்பு ஏற்பட்டுள்ளதற்கு முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன வெறுப்பு

‘‘வரலாற்றில் முன்னெப்போதுமில்லாததுபோன்று தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் பாது காப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது என்றால் இதனை சீனாவுக்கு எதிரானதொரு செயற்பாடாகவே கருதவேண்டியுள்ளது. எனவே, இந்தியாவுடன் இணைந்து சீனாவை பகையாக்கிக் கொள்வது நாட்டின் எதிர்காலத்துக்கு பெரும் சவாலாக அமையும்’’ என சர்வசன அதிகாரத்தின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சன்ன ஜயசுமன தெரிவித்தார்.


கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற நிகழ் வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் 2007ஆம் ஆண்டு முதல் கொட் எனும் பாதுகாப்பு ஒப்பந்தத் தில் இணைந்துள்ளன.

இந்த அமைப்பா னது உலகில், ஆசியாவின் நேட்டோ என்ற முறையிலேயே நோக்கப்படுகிறது.

இது சீனாவுக்கு ஆதரவான நாடுகளுக்கெதிராக ஆசிய பசுபிக் வலயத்தால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். நாங்கள் அறிந்தவரை சுதந்திரத்துக்குப் பின்னர் இதுவரை இலங்கை அரசு எந்தவொரு நாட்டுடனும் இதுபோன்ற பாதுகாப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டதில்லை.

இந்நிலையில், அரசால் இதுவரை அறிவிக்கப்படாத பாதுகாப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் நாம் இந்தியாவுடன் இணைகின்றோம் என்றால் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சீனா மீதான யுத்தச் சூழ்நிலைக்கு நாமும் ஒத்துழைக்கிறோமென்றே கருதவேண்டியுள்ளது.

இதன்மூலம் நாம் சீனாவை எதிரி நாடாக்கிக்கொள்கிறோம்’’ என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button