இலங்கையில் மொத்தமாக 69 இலட்சம் குரங்குகள் வாழ்கின்றன – நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்கள் வெளியாகியது

குரங்குகளால் ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவற்றை தடுத்து வைக்கும் இடங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேற்படி முன்னோடித் திட்டம் மாத்தளை மாவட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் தெரிவிக்கிறது.
நாட்டின் முதலாவது குரங்கு பாதுகாப்பு சரணாலயம் மாத்தளை மாவட்டத்தில் களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைப்பதற்கு இனம் காணப்பட்டுள்ளது.
நீர், உணவு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு 150 ஹெக்டயர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு 283.87 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை குறித்த புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகின!
இலங்கையில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று, தீவில் வாழும் குரங்குகளின் எண்ணிக்கை குறித்து முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
இதன்படி, இலங்கையில் 51.7 லட்சம் தொப்பி குரங்குகள் (ரிலாவா) மற்றும் 17.4 லட்சம் சாம்பல் லங்கூர்கள் (வந்துரா) வாழ்கின்றன. மொத்தமாக 69 இலட்சம்
இவை இலங்கையின் மொத்த குரங்கு இனத்தின் கணிசமான பகுதியை உள்ளடக்கியவை ஆகும்.
இந்த ஆய்வு, இலங்கையின் உயிரின பன்முகத்தன்மை மற்றும் குரங்கு இனங்களின் பரவல் குறித்து மேலும் ஆராய வழி வகுக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

