News

ஏர் இந்தியா தனது டெல்லி – கொழும்பு விமான சேவையை இரு மடங்காக்கிறது… வாராந்திர விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்கிறது.



ஏர் இந்தியா, வரும் 2025 ஜூலை 7 முதல் டெல்லி மற்றும் கொழும்பு இடையே இரண்டாவது தினசரி நேரடி விமான சேவையை தொடங்க உள்ளது.

இதனால், வாராந்திர விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்கிறது. இந்த பயணப் பாதையில் மேம்படுத்தப்பட்ட நேரோபோடி (Narrow-body) விமானங்கள் பயன்படுத்தப்படும், இதில் வணிக வகுப்பு (Business), பிரீமியம் எகானமி மற்றும் எகானமி வகுப்புகள் இடம்பெறும்.



இந்த விரிவாக்கம் இலங்கையை இந்தியாவுடன் மட்டுமின்றி, டெல்லி வழியாக ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் வகையில் மேம்பட்ட இணைப்பை வழங்குகிறது.

இந்த முயற்சி, பிராந்திய வழித்தடங்களில் வாராந்திர 7,000-க்கும் மேற்பட்ட இருக்கைகளைச் சேர்ப்பதுடன், இரு நாடுகளுக்கிடையேயான சுற்றுலா மற்றும் வணிக பயணங்களை ஊக்குவிக்கும்.

பயணிகள் இப்போது ஏர் இந்தியாவின் இணையதளம், செயலி (App) மற்றும் பயண முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யலாம்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button