இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் ஈரானியத் தலைவர்கள் “தங்கள் பைகளை பெக் செய்கிறார்கள் “

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் ஈரானியத் தலைவர்கள் “தங்கள் பைகளை பெக் செய்கிறார்கள் ” என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். இந்த நேர்மையற்ற ஆட்சி,தாங்கள் உருவாக்கும் அணு ஆயுதங்களை அவர்களின் பயங்கரவாத பிரதிநிதிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதுதான் ஸ்டீராய்டுகளில் இயங்கும் அணு பயங்கரவாதம். அது முழு உலகையும் அச்சுறுத்தும்”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் “தெளிவான ஆதரவு” இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
“எங்கள் எதிரி உங்கள் எதிரியே ,விரைவில் அல்லது பின்னர் நம் அனைவரையும் அச்சுறுத்தும் ஒன்றை நாங்கள் கையாள்கிறோம். எங்கள் வெற்றி உங்கள் வெற்றியாக இருக்கும்,” என்று அமெரிக்கத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து நெதன்யாகு குறிப்ப்பிட்டார்..

