News
SJB யின் பேராதரவுடன் பேருவளை நகர சபையின் ஆட்சியை NPP கைப்பற்றியது !

ஐக்கிய மக்கள் சக்தியின் பேராதரவுடன் பேருவளை நகர சபையின் ஆட்சியை ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
பேருவளை நகர சபையில் சுயாதீன குழு 7 ஆசனங்களை கைப்பற்றிய நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி 6 ஆசனங்களை கைப்பற்றிய அதேவேளை ஆளும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களை கைப்பற்றியது.
இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஆளும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
பிரதி தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானத்தை மீறி அதன் உறுப்பினர்கள் ஆளும் தரப்புக்கு ஆதரவளித்துள்ளனர்.



