News
யட்டினுவர பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் யஹலதென்னையில் உள்ள அவர்களின் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

யட்டினுவர பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் யஹலதென்னையில் உள்ள அவர்களின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது .
SOCO அதிகாரிகள் தற்போது சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
யட்டிநுவர, யஹலதென்னவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டிற்குள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர்கள் 52 வயதுடைய ஒருவர், அவரது 44 வயதுடைய மனைவி மற்றும் 17 வயதுடைய மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் வீட்டின் அறைகளில் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

