News
நேற்று அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டது

இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிணை வழங்கப்பட்டது.
நேற்று அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை அடுத்து, இன்று காலை மாலத்தீவில் இருந்து திரும்பிய அவர், நீதிமன்றத்தில் ஆஜராகி மனுவொன்றை சமர்ப்பித்தார்.
நேற்று, திட்டமிடப்பட்ட விசாரணைக்கு நாமல் ராஜபக்ஷ ஆஜராகத் தவறியதை அடுத்து, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது.
அப்போது, அவர் மாலத்தீவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

