News

ஒக்கம்பிட்டிய ஓ.ஐ.சி கைது

மொனராகலை – ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒக்கம்பிட்டிய, கமினியபுர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, மணல் அகழ்வு தொடர்பாக லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புகாரின்படி, மணலை டிராக்டர் மூலம் எவ்வித சட்டத் தடையும் இன்றி கொண்டு செல்ல அனுமதிக்க, மாதம் ஒரு முறை 50,000 ரூபாய் லஞ்சம் கோரப்பட்டதாகவும், சமீபத்தில் தனது புதிய வீட்டு கட்டுமானத்திற்காக மூன்று கன மீட்டர் மணல் அல்லது அதற்கு இணையான 45,000 ரூபாய் பணம் கோரப்பட்டதாகவும், பின்னர் அந்தத் தொகை 40,000 ரூபாயாக குறைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச பரிவர்த்தனையின் போது அவர் கைது செய்யப்பட்டு, வெல்லவாய மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker