News

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக செயல்படும் பொலிஸ் அதிகாரி மீது இன்று  ஆயுதமேந்திய குழுவொன்று சரமாரியாக தா*க்குதல்

களுத்துறை, எகொட உயன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி மீது இன்று (04) ஆயுதமேந்திய குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

களுத்துறை, நாகொட, வெனிவெல்கொட பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வாள்கள் மற்றும் தடிகளுடன் ஆயுதமேந்திய பத்து பேர் கொண்ட குழு அந்தப் பொலிஸ் அதிகாரியைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததால் ஆத்திரமடைந்த குழுவினர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button