News
இன்று காலை கார் மற்றும் ஆளடியான் டிப்பர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த தோப்பூரைச் சேர்ந்தவர் உயிரிழப்பு.

மூதூர் – பச்சநூர் சந்தியில் இன்று (08) காலை கார் மற்றும் டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் காரில் பயணித்த தோப்பூரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்

