News

அதிகப்படியான மதன மோதக்கவை (Guli) உட்கொண்டவர் கடும் உடல் உபாதைக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியாவில் இளைஞர் ஒருவர் போதைப் பொருள் கலந்த பானத்தால் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதி

நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் 18 வயது இளைஞர் ஒருவர் அதிகப்படியான போதை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டிஆராச்சி தெரிவித்தார்.

நுவரெலியா பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர், சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ ஒன்றைப் பார்த்து, மதன மோதக்க (Guli)மாத்திரைகளுடன் மற்றும் சில பொருட்களை கலந்து பானமாக தயாரித்து உட்கொண்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து அவர் அதிகப்படியான மயக்க நிலைக்கு உள்ளாகியதால், அவரது பெற்றோரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சமூக ஊடகங்களில் இது போன்ற வீடியோக்களை பார்த்து, அவற்றை நடைமுறையில் செயல்படுத்துவது ஆபத்தானது எனவும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இளைஞர்களுக்கு பிரதான பொலிஸ் பரிசோதகர் அறிவுறுத்தியுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button