News

போக்குவரத்து விதிமீறல் சம்பவத்தின்போது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு பிணை மறுக்கப்பட்டது


போக்குவரத்து விதிமீறல் சம்பவத்தின்போது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் ஆக்கிரோஷமாக நடந்துகொண்டமைக்காக கைதுசெய்யப்பட்ட தெமட்டகொடவைச் சேர்ந்த 46 வயதுடைய பெண், நவம்பர் 10ஆம் திகதிவரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, நீதிமன்றம் இந்த விளக்கமறியலை நீட்டித்து உத்தரவிட்டது.
போக்குவரத்து விதிமீறலுக்காக நிறுத்தும்படி உத்தரவிட்டும், குறித்த பெண் தனது காரை தொடர்ந்து ஓட்டிச் சென்றதாலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button