இலங்கையில் நாய்க்கு பயந்து ஓடும் சிறுத்தைகள்

தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவர், தனது நாயுடன் வேட்டைக்குச் சென்றபோது, நாய்களின் கூட்டத்திடமிருந்து தப்பிக்க மரத்தில் ஏறிய சிறுத்தை குட்டியை கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்தார். இந்த சம்பவம், பொகவந்தலாவ பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றது.
சிறுத்தை மற்றும் அதன் குட்டி, அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் நாய்களைத் தேடி தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்தன. சிறுத்தை ஒரு நாயை வேட்டையாட முயன்றபோது, அருகிலுள்ள பல நாய்கள் ஒன்று சேர்ந்து சிறுத்தையையும் குட்டியையும் துரத்தியதாகக் கூறப்படுகிறது.
தப்பிக்கும் முயற்சியில், குட்டி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அருகிலுள்ள மரத்தில் ஏறியது, அதே நேரத்தில் தாய் சிறுத்தை அருகிலேயே இருந்தது. நாய்கள் கலைந்து சென்ற பிறகு, குட்டி மரத்திலிருந்து பாதுகாப்பாக கீழே இறங்கி, தேயிலைத் தோட்டத்தின் வழியாக அதன் தாயுடன் நடந்து செல்வதைக் காண முடிந்தது.



