கல்முனையன்ஸ் போரம் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக ஏற்பாடு செய்துள்ள ஸஹர் உணவு விநியோகம் – 2026

ஸஹர் உணவு விநியோகம் – 2026
கல்முனையிலுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும், கல்முனையில் தங்கியுள்ள வெளியூர் பயணிகளுக்கும் ஸஹர் உணவு இலவசமாக ஏற்பாடு செய்துதரப்படும்.
ஸஹர் உணவு தேவைப்படுபவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தினை குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளுங்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் மாத்திரமே முன்பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஸஹர் நேரத்தில் உங்கள் காலடிக்கே நேரில் வந்து ஸஹர் உணவு வழங்கப்படும், இன்ஷா அல்லாஹ்!
வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களும், பல்வேறு தேவைகளுக்காக வெளியூர்களிலிருந்து கல்முனைக்கு வருகை தருபவர்களும் ரமழான் மாதத்தில் ஸஹர் உணவை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல் நிலையை கருத்திற்கொண்டு கல்முனையன்ஸ் போரம் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்!



