News
இன்று காலை பன்னிப்பிட்டியவில் இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் சொகுசு பேருந்து சாரதி உயிரிழப்பு

இன்று காலை (24 பிப்) பன்னிப்பிட்டியவிலுள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் சொகுசு பேருந்து சாரதி ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அறிக்கைகளின்படி, வீதியை கவனக்குறைவாக கடக்க முயன்ற த்ரிவீலருடன் பேருந்து மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் வலது பக்கமாகத் திரும்பிய பேருந்து, நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதியுள்ளது.
இந்த மோதலின் தாக்கத்தினால், அந்த லொறி முன்னோக்கி தள்ளப்பட்டு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறியுடன் மோதியுள்ளது.
இருவரது உயிரைப் பறித்த இந்த விபத்து குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.



