News

இன்று பதவி விலகும் சனத் ஜயசூரியவின் பயிற்சியாளர் பதவிக்காலத்தில் இலங்கை அணி 34 வெற்றிகளையும் 38 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் இன்று (28) நடைபெறவுள்ள போட்டியே, தாம் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றும் கடைசிப் போட்டியாகும். இத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே அப்பதவியிலிருந்து விலகுவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜயசூரியவின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலத்தில், இலங்கை அணி அனைத்து வகையான போட்டிகளிலும் 74 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் 34 வெற்றிகளையும் 38 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

அத்துடன், 2 போட்டிகள் எவ்வித முடிவுகளுமின்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button