இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தை S. k சங்கக்கார காலமானார்


கண்டியைச் சேர்ந்த மூத்த சட்டத்தரணியும், பலராலும் மதிக்கப்படும் சட்ட நிபுணருமான s. k சங்கக்கார அவர்கள் காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும், முன்னாள் தேசிய அணித் தலைவருமான குமார் சங்கக்காரவின் தந்தை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னார் குமாரி அவர்களின் அன்புக் கணவரும், துஷாரி, வெமிந்திர, சாரங்க மற்றும் குமார் ஆகியோரின் தந்தையுமாவார். மேலும், சஞ்சய், நிபுணி, ரூ மற்றும் யெஹாலி ஆகியோரின் மாமனாரும், தேஹான், மெத்வன், நெத்யா, வினயா, காயா, சேத், கவித் மற்றும் ஸ்வைரி ஆகியோரின் அன்புப் பாட்டனுமாவார்.
அன்னாரது பூதவுடல் கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தத் துயரமான நேரத்தில் குடும்பத்தினரின் தனிவுரிமையை (privacy) மதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கு விபரங்கள்:
* திகதி: 2026 மார்ச் 04 (புதன்கிழமை)
* நேரம்: மாலை 6.00 மணி
* இடம்: கண்டியில் உள்ள மஹையாவ மயானம்
* புறப்பாடு: அன்னாரது இல்லத்திலிருந்து மாலை 4.30 மணிக்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.
அன்னாரது மறைவு அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சட்டத்துறை சகபாடிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


