ஈரானின் இரண்டாவது கப்பலை நாங்கள் பாரமெடுப்போம் ; ஜனாதிபதி அறிவிப்பு

கொழும்பை அண்மித்த கடலிலுள்ள ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க இலங்கை முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்றிரவு அவர் கூறியதாவது,
என்ஜின் ஒன்று செயல் இழந்ததாக சொல்லப்பட்ட ஈரானுக்கு சொந்தமான அந்த கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவராமல் திருகோணமலைக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.
ஈரான் கப்பல் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அதில் இருந்த 208 பணியாளர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் .
நாங்கள் இறையாண்மையுள்ள ஒரு நாடு.எந்த நாட்டுக்கும் சார்பானவர்கள் அல்ல நாம். எங்கள் கடல் பிரதேசத்தில் இருந்து கோரப்பட்ட உதவியை இராஜதந்திர முறையில் கையாண்டோம்.
நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அனைவருடனும் நாங்கள் நட்புறவை பேணுகிறோம். நாங்கள் நடுநிலையான நாடாக மனித நேய அடிப்படையில் செயல்படுகிறோம்.
இந்த பிரச்சினையை முன்வைத்து அரசுக்கும் நாட்டுக்கும் எதிரான கருத்துக்கள் வந்தன. சிறுவர்கள் அந்த கப்பலில் இருப்பதாக தகவல் பரப்பப்பட்டது. சிறுவர்கள் இருக்கிறார்கள் அரசு அவர்களை கவனிக்காமல் இருக்கிறார்கள் என்று தான் அவர்கள் செய்திகளை பரப்புகிறார்கள். இது அரசியல் நோக்கம் கொண்டது.
இது போர் ரீதியாக யாருக்கும் செய்யும் உதவி அல்ல. மனித உயிர்களை காப்பாற்ற நாங்கள் எடுத்த முடிவு. யாரும் இதனால் விசனப்படுவார்கள் என்று நினைக்க கூடாது. சர்வதேச ஒப்பந்தங்கள் கொள்கைகள் அடிப்படையில் தான் நாங்கள் முடிவுகளை எடுத்தோம். இராஜதந்திர ரீதியில் பேச்சு நடத்தி இந்த முடிவை எடுத்தோம்.
இந்த கப்பலில் மீட்கப்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனையின் பின்னர் வெலிசர கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவர். திருகோணமலை சொல்லப்படும் போது அதன் பாதுகாப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை. கொஞ்சம் பணியாளர்களுடன் கப்பல் அங்கு செல்லும்.சர்வதேச சாசனங்களை பின்பற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது



