News

மின் உற்பத்திற்கு எரிபொருள் தட்டுப்பாடு என்ற கருத்துக்கு மறுப்பு – ஒரு கப்பல் டீசல் மின்சார உற்பத்திக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டால், அது குறைந்தது 70 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என அமைச்சர் விளக்கம்

எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு இலங்கையிடம் நிதி இல்லை என்ற கூற்றுக்கள் தவறானவை என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன நிராகரித்துள்ளார்.

குணசேனவின் கூற்றுப்படி, ஒரு கப்பல் டீசல் மூலம் 35,000–40,000 மெட்ரிக் தொன் (MT) கொண்டு வரப்படுகிறது, அதேவேளை நாட்டின் சராசரி தினசரி டீசல் நுகர்வு 4,500–5,000 மெட்ரிக் தொன்னாக உள்ளது.

இதில், மின்சார உற்பத்திக்குத் தேவையான அதிகபட்சத் தேவை 500 மெட்ரிக் தொன் மாத்திரமே ஆகும், இது தினசரி நுகர்வில் சுமார் 10% ஆகும்.

ஒரு கப்பல் டீசல் மின்சார உற்பத்திக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டால், அது குறைந்தது 70 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் (35,000 ÷ 500) என்று அவர் விளக்கினார்.

நிலக்கரி மூலமான மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சுமார் 100–130 மெகாவாட் குறைபாட்டை ஈடுசெய்ய சுமார் 100 மெட்ரிக் தொன் டீசல் தேவைப்படுவதாகவும், இது மின்சாரத்திற்கான தினசரி எரிபொருள் தேவையில் சுமார் 20% என்றும் குணசேன மேலும் குறிப்பிட்டார்.

இந்த புள்ளிவிபரங்களைச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கையிடம் போதுமான எரிபொருள் திறன் உள்ளது என்பதை வலியுறுத்தியதுடன், தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் கூற்றுக்களையும் மறுத்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button