News

வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு வாக்குச் சீட்டை  புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் அதிபர்  ஒருவர் கைது

முல்லைத்தீவில் வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு வாக்குச் சீட்டை  புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் அதிபர்  ஒருவர் சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் 

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் கடந்த 04,05.06 ஆகிய திகதிகளில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (06) முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகத்தில் வாக்களிக்கத் தயார் செய்யப்பட்ட   ஆறு வாக்கெடுப்பு நிலையங்களில் முதலாவது வாக்கெடுப்பு நிலையத்துக்கு பொறுப்பாக இருந்த  புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் அதிபர்( வயது 56)  தனது வாக்கை அளிப்பதற்காக  வாக்குச்சீட்டைப் புள்ளடியிட்ட பின்னர் தனது  கைத்தொலைபேசி மூலம் ஒளிப்படம் எடுத்துள்ளார்.

இதனை அவதானித்த  தேர்தல் கடமையில் இருந்த குறித்த நிலையத்துக்கு பொறுப்பான ARO  மேற்படி விடயமாக முல்லைத்தீவு  தேர்தல்கள் அலுவலகத்துக்கு  தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு வந்த தேர்தல் திணைக்கள அதிகாரிகள் குறித்த அதிபரின் தொலைபேசியை பெற்றுக்கொண்ட தோடு  இது தொடர்பில் பொலிஸாரிடம் பாரப்படுத்தினர் 

இந்நிலையில் குறித்த அதிபரை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் , முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button