News
எமது ஒப்பந்தத்திற்கு வரவிட்டால் ஈரானை தாக்கி அழிப்போம் – மீண்டும் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப்

ஈரான் மீது அமெரிக்கா ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை ட்ரம்ப் வெளியிடுவதாக கூறியிருந்தார்.
அதன்படி வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது: ஈரான் தலைவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர்:
ஈரானில் மகத்தான வெற்றிகளை அடைந்துள்ளோம்.
ஈரான் கடற்படை, வான்படை அழிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆயுதப்படைகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஈரான் ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் அவர்களிடம் எரிசக்தி நிலையங்களை ஒவ்வொன்றாக தாக்க உள்ளோம்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக அமெரிக்காக்கு எண்ணெய் தேவையில்லை. அமெரிக்கா தனது ஆற்றல் தேவைகளில் தன்னிறைவு அடைந்துள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்



