இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால்,இஸ்ரேலிய மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளதால் எதிர்வரும் தேர்தலில் நெதன்யாகுவின் வெற்றி சந்தேகமே என இஸ்ரேலில் இருந்து அறிக்கை..

இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால், ஈரான் மீதான வெற்றிக் குறித்து நெதன்யாகுவின் கூற்றுகள் எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டும் என்று இஸ்ரேலின் ஜாஃபா நகரில் இருந்து பேசிய அபெட் அபு ஷஹாதே தெரிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலுக்குத் தயாராகி வரும் நெதன்யாகு, “முழுமையான வெற்றி” என்ற வாக்குறுதியை அளித்து வரும் நிலையில், எபிரேய மொழியில் அதிக நம்பிக்கையான தொனியிலும், ஆங்கிலத்தில் வேறுவிதமான விவரிப்பையும் முன்வைத்து வெவ்வேறு பார்வையாளர்களுக்கு வெவ்வேறு செய்திகளை அவர் வழங்கி வருவதாக அவர் கூறினார்.
லெபனானில் சவால்களை எதிர்கொண்டு வரும் இஸ்ரேலுக்கு, அமெரிக்காவின் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் சிக்கலானதாகக் கருதப்படுவதாகவும் அபு ஷஹாதே மேலும் தெரிவித்தார்.
“அவர்களால் ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை அழிக்க முடியாது. அவர்களால் செய்யக்கூடியதெல்லாம் அதன் உள்கட்டமைப்பைச் சேதப்படுத்துவது மட்டுமே,”
என்று கூறிய அவர், இத்தகைய மதிப்பீடுகள் தீர்க்கமான முடிவுகளை எதிர்பார்த்த இஸ்ரேலிய மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நெதன்யாகுவின் வெற்றிக் கூற்றுகள் ஒரு “சந்தேகத்துடனேயே” பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.



