News
எதிர்வரும் மே மாதம் முதல் நூற்றுக்கு 53 சதவீத மின் கட்டண அதிகரிப்பு இடம்பெற உள்ளதாக சஜித் பிரேமதாச சற்றுமுன் அறிவித்தார்

எதிர்வரும் மே மாதம் முதல் நூற்றுக்கு 53 வீத மின் கட்டண அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தை இதனூடாக சரிசெய்ய அரசு முயல்வதாகவும் ஆனால் அப்படி செய்யவேண்டாமெனவும் சஜித் மேலும் கேட்டுக்கொண்டார்.
வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர் நிறுத்தத்தை கருத்திற்கொண்டு உடனடியாக இலங்கைக்கு தேவையான விடயங்களை செய்துகொள்ளுமாறும் அவர் மேலும் கூறினார்.



