News

மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இலங்கை முழுமையான ஆதரவு – ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதி

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அரபு நாடுகளின் தூதுவர்கள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (ஏப்ரல் 08) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் முக்கிய அம்சங்கள்:

• அமைதிக்கான ஆதரவு: மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் விரைவில் முடிவுக்கு வந்து, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட இலங்கை தனது முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

• தாக்குதல்களுக்கு கண்டனம்: மோதல்களில் நேரடியாக ஈடுபடாத நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்ட ஜனாதிபதி, இத்தகைய செயல்களை எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.

• பொருளாதார ஒத்துழைப்பு: எரிசக்தி தேவைகள், சுற்றுலாத்துறை மற்றும் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் அரபு நாடுகள் வழங்கும் பங்களிப்பிற்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

• இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெருமளவிலான இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்தந்த நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, ஓமான், எகிப்து, பாலஸ்தீனம், கத்தார், ஈராக், குவைத் மற்றும் லிபியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

அரபு நாட்டு தூதுவர்களுடன் ஜனாதிபதி இன்று நடத்திய கலந்துரையாடலுக்கு ஈரான் தூதுவருக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லை என இலங்கைக்கான ஈரான் தூதூவராலய தகவல்கள் தெரிவித்தன.

Recent Articles

Back to top button