News
இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் இலங்கைப் பெண் ஒருவர் காயம்

இஸ்ரேல் பாதுகாப்பு படையினால் நேற்று (08) லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இலங்கைப் பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த பெண் நலமுடன் இருப்பதாக பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.



