News

அமெரிக்கா-ஈரான் இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் போர் நடத்தும் என இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து போரிடும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு செய்துள்ளார்,

மேலும் துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனை விமர்சித்தும் அவர் பதிவிட்டுள்ளார்.


“எனது தலைமையிலான இஸ்ரேல், ஈரானின் பயங்கரவாத ஆட்சி மற்றும் அதன் பினாமிகளுக்கு எதிராக தொடர்ந்து போரிடும்,” என்று நெதன்யாகு X தளத்தில் பதிவிட்டுள்ளார். ஈரானுக்கு எர்டோகன் “இடமளிப்பதாக” குற்றம் சாட்டிய அவர், குர்திஷ் குடிமக்கள் “படுகொலை” செய்யப்பட்டதற்கும் அவரே பொறுப்பு என்றும் கூறினார்.
காசாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படும் நெதன்யாகுவின் இந்தப் பதிவு, ஈரானில் போர்நிறுத்தம் மற்றும் அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையிலும் வெளிவந்துள்ளது. 

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button