உலகம் முழுவதும் அமைதியைப் போதிக்கும் நமக்கே அமைதிப் பயணம் செய்து புதிதாக அமைதி பற்றி சொல்லி போதிக்க வேண்டுமா? ஞானசார தேரர் கேள்வி

அமெரிக்காவில் அந்த அமைதிப் பயணம் அல்லது அந்தப் பேரணிக்கு வெள்ளை இனத்தவர்களிடமும் ஏனைய இனத்தவர்களிடமும் இருந்த ஈர்ப்பு, அவர்களுக்கு ஒரு பெரிய புதிய அனுபவமாக இருந்தது. அது ஒரு தனி கதை. அவர்களுக்கு அந்தச் செய்தி ஒரு நல்ல விஷயம் என்று புரிகிறது, அதை நிச்சயமாகச் சொல்ல வேண்டும் என ஞானசார தேரர் தெரிவித்தார்.
“ஆனால், உண்மையில் ஒரு சக்திவாய்ந்த நாட்டின் ஆசீர்வாதத்துடன் அமெரிக்காவில் அதற்குப் பெரிய இடம் வழங்கப்பட்டது.
ஆனால் அது செல்ல வேண்டியது பாலஸ்தீனம் போன்ற இடங்களுக்குத்தான். அப்படிச் சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
“இங்கே என்ன நடந்துள்ளது என்றால், உலகம் முழுவதும் அமைதியைப் போதிப்பது நமக்கே (பௌத்தர்களுக்கே). இந்த பௌத்தர்களாகிய எங்களிடம்தான் அமைதிச் செய்தியைச் சொல்ல வருகிறார்கள். அகிம்சையை முன்னிறுத்தி, எந்தவொரு இனக்குழுவிற்கும், எந்தவொரு மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அனுமதி உண்டு ..
எந்தவொரு மதத்தைப் பின்பற்றும் மக்களும் வன்முறையற்ற முறையில் வாழ்வதற்கு பௌத்த மதத்தில் இடமுண்டு என்றும், புத்த பெருமானை அவமதிக்கும் சந்தர்ப்பங்களில் கூட பௌத்தர்கள் எவருக்கும் வன்முறை மூலம் பதிலளிக்கவில்லை என்றும் பௌத்தர்களுக்குப் புதிதாக அமைதியைப் பற்றி போதிக்கத் தேவையில்லை எனவும் ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார்.



