News
எரிபொருள் விலை உயர்வு குறித்து பரவி வரும் வதந்திகளால் எரிபொருள் நிலையங்களில் வரிசை – நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை ; பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
அதன் முகாமை இயக்குனர் டாக்டர் மயூரா நெத்திகுமாரகே, அடுத்த சில நாட்களில் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தலா 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயை இந்தக் கப்பல்கள் கொண்டு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை உயர்வு குறித்து பரவி வரும் பொய் வதந்திகளால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் காணப்பட்டதாக மேலாண்மை இயக்குனர் டாக்டர் மயூரா நெத்திகுமார மேலும் தெரிவித்தார்.



