News

ரணிலுடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜபக்சர்களின் கடைக்கு சென்றவர்களே…  இன,மத பேதமற்ற சஜீத் பிரேமதாசவுக்கு  வாக்குகளை அளிக்க வேண்டும் ; இம்ரான் மஹ்ரூப்


ஹஸ்பர் ஏ.எச்_
———-
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்குப் பின்னர் தான் ராஜபக்சர்களின் குடும்பம் மீண்டும் தாண்டவமாடுகின்ற நிலை காணப்படுகிறது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை  ஆதரித்து சீனக்குடா பகுதியில் இன்று (13) இடம் பெற்ற நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்


மக்கள் நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் இந்த மாற்றம் மக்களுக்கு நன்மையளிக்குப் தருணத்தில் ஜனாதிபதி தேர்தல் வந்துள்ளது  2019ல் இனவாதம் தலை தூக்கிய போது வாக்களித்தவர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள்.எந்த மேடைகளை பார்த்தாலும் சஜீத் பிரேமதாசவை பற்றி விமர்சிக்கிறார்கள். நாட்டில் வரிசையை இல்லாமால் ஆக்கியதாக  ரணில் விக்ரமசிங்க சொல்கிறார் அது ஒரு புறம் இருக்க ஆனாலும்  மக்களுடைய பொருளாதார தன்மை ஸ்திரமடையவில்லை .ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் மஹிந்தவின் குடும்பம் மீண்டும் நாட்டில் தாண்டவமாடுகிறது ரணில் விக்ரமசிங்க நாட்டை பாரமெடுத்த பின்னர் தான் நாமல் தேர்தலில் போட்டியிடுகிறார் . ரணிலுடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜபக்சர்களின் கடைக்கு சென்றவர்களே .சஜீத் பிரேமதாச பல உதவிகளை இன,மத பேதமற்ற உதவிகளை செய்துள்ளார் இன  பிரதேச வாதமற்ற தலைவர்  தான் சஜீத் பிரேமதாச .எனவே இவருக்கு கு வாக்குகளை அளிக்க வேண்டும் என்பதே எல்லோரதும் வேண்டுகோளாக காணப்படுகிறது.


Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button