News
“நாங்கள் குறைந்தது 25 வருடங்களாவது ஆட்சி செய்வோம்..”
“இந்நாட்டு மக்கள் மாலிம (திசைகாட்டி) அரசாங்கத்தை குறைந்தபட்சம் மேலும் 25 வருடங்களுக்காவது அதிகாரத்தில் வைத்திருப்பார்கள் என்று அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
‘இந்த ஐந்து வருடங்கள் முடிவடையும் போது, இந்நாட்டின் விவசாயிகளாக இருக்கட்டும் அல்லது எந்தவொரு மக்கள் குழுவாக இருக்கட்டும், மேலும் இருபது அல்லது இருபத்தைந்து வருடங்களுக்காவது இந்த ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வார்கள் என்று நான் இன்று கூறிவிட்டுச் செல்கிறேன். இன்னும் சிலருக்கு ஒருவித தயக்கம் உள்ளது’
நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.”



