News
என்னைப் படுகொலை செய்ய ஈரான் முயன்றால், அந்நாட்டைத் தாக்குவதற்கு 1,000 ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளேன் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட், என்னைப் படுகொலை செய்ய ஈரான் அரசு முயன்றால், அந்நாட்டைத் தாக்குவதற்கு 1,000 ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்படுவதாகவும் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கான உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுவிட்டன” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரானின் அனைத்துப் பகுதிகளையும் முற்றிலுமாக அழித்தொழிக்க அமெரிக்க இராணுவம் முழுத் திறமையுடனும் விருப்பத்துடனும் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், மீண்டும் அமைதிப் பேச்சைத் தொடர அமெரிக்கா சம்மதம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.



