News

வளைகுடாவில் மோதல்கள் நிறுத்தப் பட்டதை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சடுதியாக குறைந்தன

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (27) 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இரண்டு வாரங்களாக ஈரான் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடைநிறுத்தியுள்ளார்.

இதனால் மத்திய கிழக்கில் மோதலைக் குறைக்கக்கூடிய ஒரு தூதரகத் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையை அடுத்து மசகு எண்ணெய் விலையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதன்படி பிரெண்ட் ரக பீப்பாய் கச்சா எண்ணெய் இன்று அதிகாலை 5.77 சதவீதம் வீழ்ச்சியடைந்து 92.02 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அதேநேரம், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 5.50 சதவீதம் வீழ்ச்சியடைந்து 84.40 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

அத்துடன் மேர்பன் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 10.12 சதவீதம் வீழ்ச்சியடைந்து 97.05 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button