News

ரெடா தலைவர் ராஜினாமா

மத்திய மாகாண பிராந்திய பொருளாதார அபிவிருத்தி முகவர் நிலையத்தின் (REDA) தலைவர் ஏ.எச். ஸ்டீபன் (A.H. Steven) தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து மத்திய மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி. அபேகோனினால் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 06 ஆம் திகதி மூன்று வருட காலத்திற்காக ஸ்டீபன் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

தனது பதவிக் காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் மேலான காலம் உள்ள நிலையில் அவர் இவ்வாறு ராஜினாமா செய்வது குறிப்பிடத்தக்கது.

• கடிதம் சமர்ப்பிப்பு: ராஜினாமாவுக்கான குறிப்பிட்ட காரணம் எதையும் குறிப்பிடாமல், ஸ்டீபன் தனது ராஜினாமா கடிதத்தை மத்திய மாகாண ஆளுநர் சுரங்க பெர்னாண்டோவிடம் இன்று (02) கையளித்துள்ளார்.

• அமலுக்கு வரும் திகதி: இம்மாதம் 10 ஆம் திகதிக்குக்குப் பிறகு தாம் பிராந்திய பொருளாதார அபிவிருத்தி முகவர் நிலையத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதால், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருமாறு அவர் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

• பங்களிப்பு & கவலை: குறைந்தளவிலான நிதி ஒதுக்கீடுகள், பணியாளர்கள் மற்றும் வளங்களைப் பயன்படுத்தி கடந்த காலத்தில் முதலீட்டுத் துறையில் பல திட்டங்களுக்கான அடிப்படை அடித்தளத்தை அமைக்க முடிந்ததாகவும், ரெடா நிறுவனத்தின் எல்லைகளை விரிவாக்கியதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், பதவிக் காலம் முடிவதற்குள் விலக நேரிட்டுள்ளதால் தான் தொடங்கிய திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுவது தடைப்படலாம் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button