News

சுரேஷ் சலே தன்னை விடுவிக்கும்படி கோரி சமர்ப்பித்த ஆவணம் போலியானது என
இன்று நீதிமன்றத்தில் அம்பலமாகிய சம்பவம்

✍🏻 ஹுஸ்னி ஜாபிர்

தன்னை கைது செய்தது பிழை என்றும், காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என்றும் தன்னை விடுவிக்கும்படியும் கோரி சுரேஷ் ஸலே ரிட் மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அதில் தன் தரப்பு வாதத்துக்கு ஆதரவாக “ஜயகி டி அல்விஸ் ஆணைக்குழு அறிக்கை” என்ற பெயரில் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து இருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக நியமிக்கப்பட்ட மூன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களில் மூன்றாவது தான் ஜயகி டி அல்விஸ் ஆணைக்குழு. முன்னைய இரண்டு விசாரணை ஆணை குழுக்களிலும் வந்திருந்த தகவல்களை மறுப்பதற்காக என்றே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஆணை குழு தான் இது. ஆனால் இந்த ஆணைக் குழுவின் அறிக்கை எந்த இடத்திலும் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே “ஜயகி டி அல்விஸ் ஆணைக்குழு அறிக்கை” என்ற பெயரில் எந்த உத்தியோகபூர் ஆவணங்களும் இல்லை.

சுரேஷ் சலே தன் ரிட் மனுவை சமர்ப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், உதய கம்மன்பில “ஜயகி டி அல்விஸ் ஆணைக்குழு அறிக்கை” என்ற பெயரில் ஒரு கட்டுரையை பகிரங்கப்படுத்தினார். உதயகம்மன்பில வெளியிட்ட கட்டுரையை “ஜயகி டி அல்விஸ் ஆணைக்குழு அறிக்கை”
என்ற பெயரில் சுரேஷ் சலே நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தார். நீதிமன்றத்திற்கு ஆவணம் ஒன்றை சமர்ப்பிக்கும் பொழுது, குறித்த ஆவணம் சரியானது தான் என்று உறுதிப்படுத்தி (authentication) நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் பழக்கம் இருக்கின்றது. ஆனால் குறித்து ஆவணம் போலி என்பதால் அவ்வாறு உறுதிப்படுத்த முடியமல், வெற்றுக் கட்டுரை ஒன்றாகவே குறித்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று நீதிமன்றத்தில் சட்டத்தரணி சுரேன் டி பெரேரா இந்த போலி ஆவணம் பற்றி சுட்டி காட்டினார். குறித்த ஆவணம் போலியானது என்று நீதிமன்றத்திற்கு வெளியே பல தடவை பேசப்பட்டாலும், நீதிமன்றத்தில் குறித்த தரப்பிற்கு இன்று தான் அது பற்றி சுட்டிக்காட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button