‘பொதுவாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடும்.. அப்படி இருக்கும்போது பொதுவாக்கெடுப்பு கொண்டுவரப்படுமா…’ – ஜனாதிபதி
பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்தி ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நிராகரித்துள்ளார்.
புலத்சிங்கள பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு அரசியல் தர்க்கம் பற்றிய புரிதல் இல்லை என்று கூறிய ஜனாதிபதி, பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டால் நாடு இரண்டாகப் பிரியும் என்றும், ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பல துண்டுகளாகப் பிரியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
“பொதுவாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டால் இரண்டாகத் தான் பிரியும். அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும்போது பொதுவாக்கெடுப்பு கொண்டுவரப்படுமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதித் தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அரசாங்கம் மக்களைச் சந்திக்க எவ்விதத்திலும் பயப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நாங்கள் மக்களிடம் வருவோம். மக்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை,” என்றும் அவர் கூறினார்.
கூடுதலாக, மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக நிலவும் சட்டத் தடைகள் நீங்கியவுடனேயே அத்தேர்தலையும் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.



