News

உயர்மட்ட அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமான சொகுசு ஜீப் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்பு

பதுளை – லுனுகல பிரதேசத்தில் உயர்மட்ட அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் சொகுசு ஜீப் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனியார் மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் குறித்த ஜீப் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜீப்பில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத்தகடு போலியானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒருவருக்கு பதிவு செய்யப்பட்ட சிறிய காரொன்றின் இலக்கத் தகடுகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button