News
16 பேர் கொண்ட குழுவுடன் சென்று மாமியாரின் வீட்டை உடைத்து அவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்தி 35 பவுண் தங்கத்தையும் கொள்ளையடித்த மருமகன் #இலங்கையில் சம்பவம் பதிவு
தனிமையில் இருந்த மாமியாரின் வீட்டை 16 பேர் கொண்ட குழுவுடன் சென்று மருமகன் வீட்டை உடைத்து மாமியாரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வீட்டிலிருந்த 35 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (6) களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் கணவர் இல்லாத நிலையில், தனது (22) மகள் திருமணம் முடித்து வேறு இடத்தில் வாழ்ந்து வருகின்றதுடன் தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
சம்பவம் குறித்து திங்கட்கிழமை (07) இரவு பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் மருமகன் மற்றும் 16 பேரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனகராசா சரவணன்